கொரோனா பரவலை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

கொரோனா பரவலை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணியுடன் இன்று (05) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.