
மீள் அறிவித்தல் வரை 3 பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு...!
கம்பஹா காவல் துறை பிரிவிற்குட்பட்ட திவுலபிட்டி மினுவாங்கொடை மற்றும் வெயாங்கொடை ஆகிய பகுதிகளுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காவல் துறை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கடைபிடிக்க வேண்டிய மேலும் சில நிபந்தனைகளையும் காவல் துறையின் சுட்டிக்காட்டியுள்ளனர்.
01. இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அனைவரும் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும்.
02. தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவிற்குரிய பகுதிகளுக்கு செல்லவோஇ அங்கிருக்கு ஏனைய பகுதிகளுக்கு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
03. நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் பேருந்து பயணிக்க முடியும் என்பதோடுஇ தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பயணிகளை இறக்குவதற்கோ அல்லது அப்பகுதிகளிலிருந்து பயணிகளை ஏற்றவோ முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
04. மேற்குறிப்பிட்டவாறே புகையிரத நிலையங்களிலும் பயணிகளை ஏற்றவோ இறக்குவதற்கோ முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.