நாளை முதல் 3 தினங்களுக்கு போக்குவரத்து திணைக்களம் திறந்திருக்காது...!

நாளை முதல் 3 தினங்களுக்கு போக்குவரத்து திணைக்களம் திறந்திருக்காது...!

நாராஹேன்பிட்டி மற்றும் வேரஹெர ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள போக்குவரத்து திணைக்களங்களை மூன்று தினங்களுக்கு தற்காலிகமாக மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 7,8 மற்றம் 9 ஆம் திகதிகளில் பொது மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு குறித்த பகுதிகளில் அமைந்துள்ள போக்குவரத்து திணைக்கள அலுவலகங்கள் திறக்கப்படமாட்டாது என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.