
மும்பையில் புதிதாக இன்று 2,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மும்பையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,848 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மராட்டியத்தில் தான் அதிக அளவு காணப்படுகிறது. அதிலும் மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் கொரோனா பரவலின் வேகம் மீண்டும் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் இன்று மும்பையில் மேலும் 2,848 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதுவரை மும்பையில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 938 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் இன்று கொரோனா தொற்றிலிருந்து 2,257 பேர் குணமடைந்த நிலையில் மொத்தம் 1 லட்சத்து 88 ஆயிரத்து 742 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 23 ஆயிரத்து 976 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 46 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 245 ஆக உயர்ந்து உள்ளது.