தொல்லியல் துறையில் தமிழ்மொழி புறக்கணிப்பு – நீதிமன்றில் முறைப்பாடு பதிவு

தொல்லியல் துறையில் தமிழ்மொழி புறக்கணிப்பு – நீதிமன்றில் முறைப்பாடு பதிவு

செம்மொழியான தமிழ் மொழியை புறக்கணித்து மத்திய தொல்லியல் துறை பட்டயப்படிப்புக்காக வெளியிட்ட அறிவிப்பை இரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வரும் மத்திய தொல்லியல் துறை கல்லூரியில், 2 ஆண்டு முதுகலைப் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதில் பழமையும் பெருமையும் மிக்க தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முறையிட்ட வழக்கறிஞர் அழகுமணி, தமிழ் மொழியை இணைத்து புதிதாக அறிவிப்பு வெளியிடுமாறு கோரியுள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, குறித்த முறைப்பாட்டை மனுவாகத் தாக்கல் செய்யவும் அவசர வழக்காக நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாகவும் தெரிவித்தனர்.