தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......!

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 68 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி, தமிழகத்தில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 120 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 5 ஆயிரத்து 185 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 46 ஆயிரத்து 128 ஆக உயர்வடைந்துள்ளது.

5 ஆயிரத்து 718 பேர் கடந்த 24 மணிநேரத்தில் மீண்ட் நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 91 ஆயிரத்து 811 ஆக அதிகரித்துள்ளது.

44 ஆயிரத்து 437 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.