காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு நாளை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு நாளை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு நாளை பாஜக-வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளராக செயல்பட்டுவருபவர் குஷ்பு. இவர் பல நாட்களுக்கு முன்னதாகவே காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியானவண்ணம் இருந்தது. ஆனால், அந்த தகவல்களை குஷ்பு தொடர்ந்து மறுத்து வந்தார்.

 

ஆனால், மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்திய புதிய கல்விக்கொள்கையை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்த்தபோதும் குஷ்பு ஆதரவு அளித்தார். இதனால், அவர் பாஜகவில் இணைய உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

 

 

மேலும், இதை உறுதிப்படுத்தும் விதமாக குஷ்பு குடும்பத்தினர் டெல்லியில் பா.ஜனதா தலைவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், தேவையற்ற தகவல்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் குஷ்பு தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி குஷ்பு நாளை பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் குஷ்பு நாளை பாஜகவில் இணைய உள்ளார்.