
இஸ்ரேலிய படையினரால் தாக்கப்பட்டு பாலஸ்தீனிய இளைஞர் உயிரிழப்பு
ரமல்லாவின் வட கிழக்கில் டர்மஸ்-அய்யா நகருக்கு அருகே இஸ்ரேலிய படைகளால் தாக்கப்பட்டதில் பலஸ்தீன இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பல பாலஸ்தீனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீன மருத்துவ வளாகத்தின் இயக்குனர் அகமட் அல் பிடாவி, பாலஸ்தீன செய்தி நிறுவனங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை உறுதிப்படுத்தினார்.
குறித்த இளைஞரின் கழுத்தில் அடிப்பதற்கான அறிகுறிகள் இருந்தன என்றும் அகமட் அல் பிடாவி அறிவித்துள்ளார்.
மேலும் குறித்த இளைஞரின் கழுத்தில் ஏற்பட்ட காயங்கள் இஸ்ரேலிய வீரர்களின் துப்பாக்கிகளால் தாக்கப்பட்டதற்கு ஒத்ததாக இருப்பதாகவும் மருத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.