சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

உலகளவில் நாள் ஒன்றில் அதிகளவான கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளனர்.

நேற்றைய தினம் மாத்திரம் உலகளவில் 6 லட்சத்து 63 ஆயிரத்து 71 பேர் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

அதில் அமெரிக்காவிலேயே அதிகளவானோர் கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 98 ஆயிரத்து 472 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

குறித்த காலப்பகுதியில் அமெரிக்காவில் கொவிட் 19 தொற்றால் 966 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி அமெரிக்காவில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 35 ஆயிரத்து 137 ஆக அதிகரித்துள்ளதுடன் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 93 லட்சத்தை கடந்துள்ளது.

அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக நேற்றைய தினம் இந்தியாவிலயே அதிகளவான கொவிட் 19 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அந்த நாட்டில் நேற்றைய தினம் 48 ஆயிரத்து 120 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் குறித்த காலப்பகுதியில் கொவிட் 19 தொற்றால் 550 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கமைய இந்தியாவில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 681 ஆக அதிகரித்துள்ளதுடன் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 81 லட்சத்தை கடந்துள்ளது

அதேநேரம் உலகளவில் கொவிட் 19 பீடிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சத்தை கடந்துள்ளதுடன் 11 லட்சத்து 93 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

எவ்வாறெனினும் சர்வதேச ரீதியில் கொவிட் 19 தொற்றால் பீடிக்கப்பட்டிருந்த 3 கோடியே 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.