சுவரொட்டிகளை அகற்றும் பணியில் தொழிலாளர்களை இணைக்க நடவடிக்கை!

சுவரொட்டிகளை அகற்றும் பணியில் தொழிலாளர்களை இணைக்க நடவடிக்கை!

பொதுத் தேர்தலை முன்னிட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கு தொழிலாளர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேவைக்கேற்ப நாட்டில் பொலிஸ் நிலையங்கள் ஊடாக தொழிலாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் கடந்த 14 ஆம் திகதி முதல்  இன்றுவரை 12,084 பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றப்பட்டுள்ளன.

இந்த வாரத்திற்குள் மீதமுள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளும் அகற்றப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.