நாட்டில் நேற்றைய தினம் 10,510 PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு

நாட்டில் நேற்றைய தினம் 10,510 PCR பரிசோதனைகள் முன்னெடுப்பு

நாட்டில் நேற்று (31) 10,510 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக COVID – 19 ஒழிப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை 512,735 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செயலணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, இன்று (01) காலை தோஹா கத்தாரிலிருந்து வருகை தந்த இலங்கையர்கள் 19 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

முப்படையினரால் பராமரிக்கப்படும் 60 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4990 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து இதுவரை 60,890 பேர் வீடு திரும்பியுள்ளதாக COVID – 19 ஒழிப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.