கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் வழமைக்கு...!

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் வழமைக்கு...!

கொழும்பு பங்கு சந்தையில் அனைத்து நடவடிக்கைகளும் இன்று முதல் வழமைப்போன்று இடம்பெறும் என கொழும்பு பங்கு சந்தையின் கடமைநேர அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக இன்று முதல் மறு அறிவித்தல் வரை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்திற்கு பொதுமக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.