PCR முடிவுகளுக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

PCR முடிவுகளுக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவித்தல்

PCR பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் நபர்கள் சமூகத்திற்குள் செல்வது ஆபத்தானது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது பரவும் வைரஸ் அதிக ஆபத்து உள்ளதால் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலை யில் அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 6 பேர் தொலைபேசியை நிறுத்தி வைத்து தலைமறைவாகி உள்ளனர்.

அவர்கள் 6 பேரையும் கண்டறியும் பணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.