துருக்கியில் நிலநடுக்கம் : 34 மணி நேரத்துக்கு பிறகு 70 வயது முதியவர் உயிருடன் மீட்பு

துருக்கி நிலநடுக்கத்தால் கட்டிடம் இடிந்து விழுந்து 34 மணி நேரத்துக்கு பிறகு 70 வயது முதியவர் ஒருவர் நேற்று அதிகாலை உயிருடன் மீட்கப்பட்டார்.

இந்த நிலையில் இஸ்மிர் நகரில் நிலநடுக்கத்தால் கட்டிடம் இடிந்து விழுந்து 34 மணி நேரத்துக்கு பிறகு 70 வயது முதியவர் ஒருவர் நேற்று அதிகாலை உயிருடன் மீட்கப்பட்டார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கம் தாக்கிய 34 மணி நேரத்துக்குப் பிறகு ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு இருப்பது மீட்புக் குழுவினருக்கு நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. அவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் எஞ்சியவர்களை மீட்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.