
மாமியாரை 20 அடி பள்ளத்தில் தள்ளி விட்ட மருமகள்! மாமியார் பலி
நுவரெலியா – நானுஓயா, சமர்செட் தோட்டத்தில் பெண் ஒருவர் தாக்கியதில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் மருமகள் மாமியாரை தாக்கியுள்ளார்.
குறித்த பெண் வயோதிபப் பெண்ணை சுமார் 20 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்போது 73 வயதான மூதாட்டியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய 38 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
நானுஓயா பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.