
அமெரிக்க தேர்தலில் மூன்றாவது தடவையாகவும் சாதித்த தமிழர்! வெளியானது முடிவுகள்
ன்றாவது முறையாகவும் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தமிழ் பேசும் குடும்பத்தை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பெறுபேறுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மூன்றாவது முறையாக தேர்வாகியுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரஸ்டன் நெல்சன் என்பவரை அவர் தோற்கடித்துள்ளார்.
மொத்தமாக பதிவான வாக்குகளில் ராஜா 71 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார் என்கின்றன அந்நாட்டு ஊடகங்கள்.
ராஜாவின் பெற்றோர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவார்கள். டெல்லியில் பிறந்த ராஜா தற்போது Illinois மாகாணத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.