இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பணியாளர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி வரும் நான்கு பணியாளர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூன்று சாரதிகள் மற்றும் ஜெனரேட்டர் ஒபரேட்டர் ஆகியோர் இவ்வாறு கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நோய்த் தொற்று பரவிய காரணத்தினால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் போக்குவரத்து பிரிவு மூடப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,018 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 6,137 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 5,858 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 400 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.