மேற்கு வங்காளத்தில் 4 லட்சத்தை கடந்த கொரோனா - இன்று மேலும் 3,928 பேருக்கு தொற்று

மேற்கு வங்காளத்தில் 4 லட்சத்தை கடந்த கொரோனா - இன்று மேலும் 3,928 பேருக்கு தொற்று

மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.

 


இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,928  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  4,01,394  ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 58 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 7,235 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 4,339 பேர் குணமடைந்த நிலையில்,  எண்ணிக்கை  3,59,071  ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 35,088 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது