நீங்கள் வசிக்கும் பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா? - இதோ விபரம்..!

நீங்கள் வசிக்கும் பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா? - இதோ விபரம்..!

மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் நாளை (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டாலும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் அவ்வாறே பேணப்படும்.

கொழும்பில் மட்டக்குளி , முகத்துவாரம் , வாழைத்தோட்டம் , கொட்டாஞ்சேனை , வெல்லம்பிட்டி , ஆட்டுப்பட்டித் தெரு ,பொறளை ,புளுமெண்டல் ,கரையோர காவற்துறை பிரதேசம் , மாளிகாவத்தை , தெமட்டகொட ,கிராண்ட்பாஸ் ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக தொடரும்.

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை ,பேலியகொடை , கடவத்த ,ராகம, நீர்கொழும்பு , பமுனுகம , ஜா-எல , சப்புகஸ்கந்த ஆகிய காவற்துறை எல்லைப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக தொடரும்.

களுத்துறை மாவட்டத்தின் ஹொரணை , இங்கிரிய காவற்துறை அதிகார பிரிவுகளும், வேக்கட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பேணப்படும்.

இராணுவ தளபதி சவோந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.