அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழ் பூர்வீகப்பெண்..!

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழ் பூர்வீகப்பெண்..!

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட கமலாதேவி ஹரீஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவிக்கு தெரிவாகும் முதலாவது தமிழ் பின்புலம் கொண்டவராக அவர் உள்ளார்.

2017ம் ஆண்டு கலமாதேவி ஹரிஷ் கலிஃபோர்னியாவில் இருந்து அமெரிக்க மேலவையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அதற்கு முன்னர் 90களில் இருந்து சட்டத்துறையில் பல்வேறு உயர் நிலை பதவிகளை வகித்து வந்துள்ளார்.

கமலாவின் தாயார் மருத்துவர் சியாமளா கோபாலன் - ஒரு தமிழர் - புற்றுநோய் வல்லுநர் ஆவார்,

அவர் சென்னையிலிருந்து 1960-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு புலம்பெயர்தார்.

கமலாவினுடைய தந்தை ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் - ஜமைக்காவைச் சேர்ந்தவர்,

அவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பேராசிரியாக பணி புரிந்தார்.

கமலா தேவி, அமெரிக்க ஜனாதிபதி டொனலாட் ட்றம்ப் ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் செயற்படுபவர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவருக்கு எதிராக குற்றபத்திரிகை கொண்டுவரப்பட வேண்டும் என்ற விவாதத்தை ஆரம்பித்தவர் என்ற நிலையில் பார்க்கப்படுகிறார்.