ட்ரம்பின் தோல்வி - அவரது மனைவி வெளியிட்டுள்ள அறிவிப்பு

ட்ரம்பின் தோல்வி - அவரது மனைவி வெளியிட்டுள்ள அறிவிப்பு

 

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டெனாால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்த நிலையில், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஜனநாயகம் பாதுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் தோல்வியை தொடர்ந்து மனைவி மெலனியா அவரை விவாகரத்துச் செய்ய முடிவெடுத்து விட்டதாக முன்னாள் உதவியாளர்கள் தெரிவித்த செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ட்ரம்ப் - மெலனியா இடையே மனக்கசப்புகள் இருந்ததாக முன்பே தகவல்கள் வந்தாலும் கூட இதுவரை அவர்கள் இத்தகவலை மறுத்தே வந்துள்ளனர்.

இந்நிலையில், இவற்றுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், ட்ரம்ப்பிற்கு ஆதரவாக மெலனியா ட்ரம்ப் தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதில், அமெரிக்க மக்கள் நியாயமான தேர்தல்களுக்கு தகுதியானவர்கள். ஒவ்வொரு வாக்குகளும் எண்ணப்பட வேண்டும், அது சட்டவிரோதமானதாக அல்ல - எமது ஜனநாயகத்தை முழுமையான, வெளிப்படைத்தன்மையுடன் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.