’இது மிகவும் நல்ல செய்தி’ - டொனால்ட் ட்ரம்ப் திடீர் டுவிட்

’இது மிகவும் நல்ல செய்தி’ - டொனால்ட் ட்ரம்ப் திடீர் டுவிட்

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு தொடர்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

‘பங்குச்சந்தை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது, தடுப்பூசி மிக விரைவில் வந்துகொண்டிருக்கிறது. தடுப்பூசி 90 சதவீதம் பலனளிக்கிறது. இது மிகவும் நல்ல செய்தி’ என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பைசர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதி கட்ட ஆய்வு முடிவுகளின் முதல் பகுதி நேற்று வெளியானது.

அதில், இந்த தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கிறது என பைசர் மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த தடுப்பூசியில் மிகப்பெரிய அளவில் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

தடுப்பூசி கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதாக பைசர் நிறுவனம் அறிவித்த சில நிமிடங்களில் பங்குச்சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.

இந்த நிலையிலேயே குறித்த விடயம் மிகவும் நல்ல செய்தி என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.