அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மார்க் எஸ்பர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்...!

அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மார்க் எஸ்பர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்...!

அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மார்க் எஸ்பரை (Mark Esber) அந்த பதவியில் இருந்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நீக்கியுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு பதிலாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் மில்லர் (Christopher Miller) பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக மார்க் எஸ்பருக்கும் டொனால்ட் டிரம்புக்கும் இடையில் முறுகல் நிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

அவருக்கு பதிலாக தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் மில்லர் அப்பதவிக்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மார்க் எஸ்பரை அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதிவியில் இருந்து நீக்குவதாக ஜனாதிபதி; டிரம்ப் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் மில்லர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் எஸ்பரின் பணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் டொனால்ட் டிரம்ப் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததை டொனால்ட் டிரம்ப் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்தநிலையில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து பேரணி நடத்த அவர் தீர்மானித்துள்ளதாக சர்வதே செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் பெரும்பான்மையான ஆசனங்களை கைப்பற்றி வெற்றிப்பெற்றுள்ளார்.

எனவே டொனால்ட் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, ஜனநாயக ரீதியில் அதிகார மாற்றத்தை எந்தவித இடையூறும் இன்றி முன்னெடுத்து செல்ல ஜோ பைடனுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

டிரம்பின் குடும்பத்திலும் சிலர் இதனை வலியுறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம் டிரம்பின் நட்பு வட்டாரத்தில் உள்ள சில முக்கிய நபர்கள் அவரது நிலைப்பாடு மிகவும் சரியானது என்றும் அவர் தனது சட்ட போராட்டத்தை தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து முக்கிய மாகாணங்களில் தேர்தல் பிரசார பாணியில் பிரமாண்ட பேரணிகளை நடத்த டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.