
பொரளை காவல்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்..!
பொரளை காவல்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 40 பேர் குண்டசாலையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பொரளை காவல்துறை நிலையத்தின் சில அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொரளை காவல்துறை நிலையத்தின் சேவையை முன்னெடுப்பதற்காக வேறு காவல்துறை நிலையங்களில் இருந்து அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.