அமெரிக்க துணை அதிபரின் தலைமை அதிகாரியாக யாழ்ப்பாணத்து பெண்மணி

அமெரிக்க துணை அதிபரின் தலைமை அதிகாரியாக யாழ்ப்பாணத்து பெண்மணி

அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸின் முதன்மை ஆலோசகராகவும், தலைமைப் பணியாளராகவும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ரோஹினி கொசோக்லு என்பவர் செயற்படவுள்ளார்.

இதன்மூலம் அமெரிக்க செனட்டர் ஒருவருக்கு தலைமைப் பணியாளர் பதவியை வகித்த ஒரே அமெரிக்க-ஆசிய பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

இருப்பினும், கமலா ஹாரிஸின் தலைமைப் பணியாளராக ரோஹினி நியமிக்கப்பட்டமையால் மற்றைய ஜனநாயகக் கட்சி சகாக்கள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.