
தீப்பற்றி எரிந்த 35 குடிசைகள்: கடுமையாகப் போராடும் தீயணைப்புப் படையினர் - இந்தியாவில் நடந்த துயரம்
இந்தியாவின் கொல்கத்தாவின் புதிய நகரத்தில் உள்ள நிவேதிதா பள்ளத்தின் சேரி பகுதியில் அமைந்துள்ள இரு குடிசைகளிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு பிரிவின் பல வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த அனர்த்தம் காரணமாக சுமார் 35இற்கு மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையாகியுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் எதுவும் பதிவாகாத நிலையில், தீப்பரவலுக்கான காரணமும் இதுவரை கண்டறியப்படவில்லை.
கொரோனா உடன் இந்தியா போராடுகையில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இப் பண்டிகை காலங்களில் பட்டாசுகளைப் பயன்படுத்துவது, விற்பனை செய்வது மற்றும் கொள்வனவு செய்வதை கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.