
மூன்றரை வருடங்கள் கொரோனாவுடன் தான் வாழ வேண்டும் - மீண்டும் வலியுறுத்தும் சுகாதார அமைச்சு
அடுத்த மூன்றரை வருடகாலத்திற்கு மக்கள் கொரோனா வைரசுடன் வாழ்வதற்கு பழகிக்கொள்ளவேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சில காலத்திற்கு வைரஸ் காணப்படும் என்பதால் இலங்கை அதனை எதிர்கொள்வதற்கான தனது அணுகுமுறையை மாற்றும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய அனில் ஜெயசிங்கவையும், சுகாதார அமைச்சின் பேச்சாளராக பணியாற்றிய வைத்தியர் ஜயருவன் பண்டாரவையும் தான் பதவி நீக்கியதாக தெரிவிக்கப்படுவதை சுகாதார அமைச்சர் நிராகரித்துள்ளார்.