
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 69ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பகுதிகள்
கந்தானை பகுதியைச் சேர்ந்த 70 வயது ஆண்
கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 74 வயது பெண்
கொழும்பு - 13 பகுதியைச் சேர்ந்த 78 வயது ஆண்