கைதிகளின் ஆர்பாட்டம் நிறைவடைந்தது..! -

கைதிகளின் ஆர்பாட்டம் நிறைவடைந்தது..! -

வழக்கு விசாரணைகளை விரைவுப்படுத்துமாறு கோரி வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை நிறைவடைந்துள்ளது.

குறித்த கைதிகள் தங்களது கோரிக்கையை முன்வைத்து சிறைச்சாலையின் கூரையின் மீதேறி எதிர்ப்பினை வெளிக்கொணர்ந்தனர்.

கைதிகளின் கோரிக்கைகளை கடிதம் மூலம் பொறுப்பேற்று ஆராய்வதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே அறிவித்தமைக்கு அமைய கைதிகள் ஆர்பாட்டத்தை நிறைவு செய்துக்கொண்டுள்ளனர் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் துசார உபுல்தெனிய குறிப்பிட்டார்.

நேற்று மாலை முதல் ஆரம்பிக்கப்பட்ட இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் 20 இற்கும் மேற்பட்ட கைதிகள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.