
கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது
நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 479 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,069ஆக அதிகரித்துள்ளது.
மேலும், குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 5,669 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 19,771ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.