உணவகம் அமைக்க நிலப்பரப்பு வழங்கப்படவில்லை - மகிந்த அமரவீர மறுப்பு..!

உணவகம் அமைக்க நிலப்பரப்பு வழங்கப்படவில்லை - மகிந்த அமரவீர மறுப்பு..!

வத்தளை - முத்துராஜவெல பகுதியில் உணவகம் ஒன்றை அமைப்பதற்காக 600 ஏக்கர் நிலப்பரப்பு தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.