திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தைத் தாண்டியது

திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்தைத் தாண்டியது

நாட்டில் மேலும் 628பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 627 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத் தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களே இவ் வாறு அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

அதன்படி, திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 488 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலியிலிருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 038 ஆக உயர்ந் துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 728பேர் நேற் றைய தினம் குணமடைந்தனர். அத்துடன் நாட்டில் கொ ரோனா தொற்றுக்குள்ளாகிக் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்து 032 ஆக அதிகரித் துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 6ஆயிரத்து 877 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர்.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 433 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றால் இதுவரை 129 பேர் உயிரிழந்துள்ளமை குறிப் பிடத்தக்கது.