விமான நிலையங்களை மீண்டும் திறப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!
சுற்றுலாத்துறையின் நிமித்தம் விமான நிலையங்களை மீளத் திறந்து, சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவது குறித்த ஆய்வுகளை நடத்துவதற்கான விசேடகுழு ஒன்று சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து சுற்றுலாத்துறையை முன்னெடுத்து செல்வதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் தொற்று நோயியல் விஞ்ஞானப்பிரின் அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத்துறைசார் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்கு அவசியமான சுகாதார வழிகாட்டால்கள் மற்றும் முதற்கட்ட திட்டங்கள் என்பவற்றை வகுப்பதற்கு ஒன்றிணைந்த குழுவொன்றை நியமிப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குடிவரவு குடியகல்வு திணைக்களங்களுக்கு வருபவர்கள் www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தினமொன்றை ஒதுக்கி கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் நிலையில் திணைக்களத்தின் நடைமுறைகளை உரிய முறையில் முன்னெடுத்து செல்வதற்காக திகதியொன்றை ஒதுக்கி கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.