மொரட்டுவை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து- இரு பெண் பிள்ளைகளுக்கு நேர்ந்த பரிதாபம்
மொரட்டுவை-எகொட உயன- புதிய காலி வீதியில் நேற்றிரவு (04) இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பெண் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதோடு, கர்ப்பிணி பெண்ணொருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
பாதையை கடக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில் வேகமாக வந்த உந்துருளியொன்று மோதுண்டே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பத்தில் 7 வயது சிறுமி மற்றும் 1 வயதுடைய குழந்தையும் பரிதாபமாக பலியாகியுள்ளதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்தின் போது பலத்த காயமடைந்த கர்ப்பிணிப் பெண் பானந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது