மேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியாக உயர்வு

மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று (திங்கட்கிழமை) 103.14 அடியாக உயர்ந்து காணப்படுவதாக கூறப்படுகின்றது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், நேற்று 5 ஆயிரத்து 800 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று மேலும் அதிகரித்து 6 ஆயிரத்து 139 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.

மேலும், அணையில் இருந்து காவிரியில் 500 கன அடியும், கால்வாயில் 500 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று 102.82 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 103.14 அடியாக உயர்ந்தது காணப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் இதேநிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.