
மனைவியை கத்தரியால் குத்திக் கொலை செய்த கணவன்...!
நாம் அனைவரும் அறிந்த பல பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் காணப்படுகின்றன.
வீடியோ கேம் தொடர்பில் நாம் அனைவரும் கேள்வியுற்றிருக்கின்றோம்.
சிலர் வீடியோ கேம் விளையாடுவதற்கு ஆரம்பித்தால் உண்பதற்கும் மறந்து விடுவார்கள்.
அந்த வகையில் தனது மனைவியைக் குத்திக் கொலை செய்து விட்டு வீடியோ கேம் விளையாடிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மனைவியுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட கணவன், மனைவியை கத்தரியால் தொடர்ச்சியாகக் குத்திக் கொலை செய்து விட்டு மனைவியின் தந்தை மற்றும் தாய் ஆகியோருக்கும் அறிவித்து விட்டு காவல் துறையினருக்கும் சம்பவத்தை தெரிவித்துவிட்டு வீடியோ கேம் விளையாண்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்த போது கணவன் வீடியோ கேம் விளையாண்ட வண்ணம் இருந்துள்ளார்.
நிலத்தில் வீழ்ந்து கிடந்த மனைவியை காவல் துறையினர் வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
சிகிச்சைகளுக்கு உட்படுத்தியபோது மனைவி ஏற்கனவே உயிரிழந்து விட்டாரென வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் ராஜஸ்தான் ஜோர்பூரில் சம்பவித்துள்ளது.