
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஆராய மேலும் ஒரு குழு நியமனம்..!
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் மேலும் விசாரணைகணை மேற்கொள்ள சட்டமா அதிபரினால் 12 சட்டத்தரணிகள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அமைச்சர் உள்ளிட்ட மேலும் சிலர் நேற்றையதினம் சட்டமா அதிபரை சந்தித்தனர்.
அந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.