
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சமையல் பிாிவில் 14 பேருக்கு கொரோனா
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சமையலறையில் பணியாற்றிய 14 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில் அந்த வளாகத்தை முழுமையாக தொற்று நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொற்றுறுதியான பணியாளர்கள் நேற்றைய தினம் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
அத்துடன் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்பினை பேணியவர்களும் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
அதேநேரம் சமயலறையின் நடவடிக்கையை முன்னெடுத்து செல்வதற்காக இன்று முதல் பிரிதொரு தரப்பினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.