தமிழகத்தை சேர்ந்த 27 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்..!

தமிழகத்தை சேர்ந்த 27 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்..!

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 27 தமிழக கடற்றொழிலாளர்களை கடற்படை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுக் காலை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3000 மேற்பட்ட கடற்றொழிலாளரகள் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 27 மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன், அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.