வேளாண் சட்டங்களின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? -விவசாயிகளிடையே உரையாற்றுகிறார் மோடி

வேளாண் சட்டங்களின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? -விவசாயிகளிடையே உரையாற்றுகிறார் மோடி

டெல்லி மற்றும் டெல்லியின் எல்லைப்பகுதிகளில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு உரிமை உண்டு என்றும் மக்களை பாதிக்காத வகையில் போராட்டம் இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. 

 

அதேசமயம், வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கும் சாத்தியக்கூறுகளை ஆராயும்படி மத்திய அரசை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். விவசாயிகளிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

 

 

இந்த சூழ்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று பிற்பகல், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், காணொளி வாயிலாக பிரதமர் மோடி கலந்துகொண்டு விவசாயிகளிடையே உரையாற்ற உள்ளார். அப்போது, மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், சட்டங்களில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்தும், விவசாயிகளின் நலனுக்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.