இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது, 95.50 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது புதிய பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. உயிரிழப்பும் குறைந்துவருகிறது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

 

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. 

 

மொத்த பாதிப்பு 10,004,599 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 25,153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 347 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,45,136 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,50,712 ஆக உயர்ந்துள்ளது. 

 

 

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,08,751 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12வது நாளாக 4 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. மொத்த உயிரிழப்பு 1.45 சதவீதமாக நீடிக்கிறது. குணமடையும் விகிதம் 95.46 சதவீதமாக உயர்ந்துள்ளது.