
விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை
மத்திய வங்கியின் சிரேஸ்ட அதிகாரிகள் சிலர் குத்தகை மற்றும் நிதி நிறுவனங்களில் நிதி மற்றும் வேறு நன்மைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மத்திய வங்கி, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் கோரியுள்ளது.
இவ்வாறு சுமார் 50 சிரேஸ்ட அதிகாரிகள் பல்வேறு நன்மைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக அச்சு ஊடகங்கள் மற்றும் இணையத்தளம் என்பவற்றில் வெளியாகியுள்ள செய்திகளை கருத்தில் கொண்டு குறித்த கோரிக்கையை முன்வைப்பதாக மத்திய வங்கியின் தொடர்பாடல் திணைக்களம் கோரியுள்ளது.
இதேவேளை, நிதி மற்றும் குத்தகை நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்திய வங்கி ஆளுநரால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு, பொது மக்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் முறைப்பாடுகளையும் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் மத்திய வங்கியில் வங்கியற்ற நிதி நிறுவனங்களை கண்காணிக்கும் திணைக்களத்திற்கு அஞ்சல் மூலம் அல்லது மின்னஞ்சல் ஊடாகவும் அறிவிக்குமாறு அந்த குழுவின் பிரதானி, ஜனாதிபதி சட்ட பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ஹரிகுப்தா ரேஹானதீர தெரிவித்துள்ளார்.