
உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதேசிய விவசாயிகள் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். இது அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
"உழந்தும் உழவே தலை"
உலகின் தலையாய தொழிலான உழவுத்தொழில் செய்துவரும் விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த "தேசிய விவசாய தின நல்வாழ்த்துகளை" அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்திற்கே படியளக்கும் உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் என கூறியுள்ளார்.