பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர்..!

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர்..!

ஹொரண - பொரளுகொடை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பண்டாரகம மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தடுத்து வைத்து விசாரிப்பதற்கான நீதிமன்ற அனுமதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்தே இந்த தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

22 மற்றும் 25 வயதுடைய இங்கிரிய பிரதேசத்தில் வசிக்கும் அவர்கள் கடந்த 20 ஆம் திகதி ஹொரண காவல் துறையினரால் முச்சக்கர வண்டி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டனர்.