
இந்தியாவில் கொரோனா வைரசால் ஒரு கோடியே ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 97 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
ந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது புதிய பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,01,46,846 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 23,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 336 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,47,092 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,17,834 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 24,661 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,81,919 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மொத்த உயிரிழப்பு 1.45 சதவீதமாக நீடிக்கிறது. குணமடையும் விகிதம் 95.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே பிரிட்டனில் வேகமாக பரவி வரும் வீரியமிக்க உருமாறிய கொரோனா, இந்தியாவில் பரவாமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.