
டெல்லியில் முக கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள மாயாபுரி பகுதியில் முக கவசம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இன்று அதிகாலை 3.50 மணிக்கு தொழிற்சாலையின் 3-வது மாடியில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
இதில் சில தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கதவுகளை உடைத்து அங்கிருநத 4 பேரை மீட்டனர். பின்னர் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவர்களின் ஜுகல் கிஷோர் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த எந்திரங்கள், பொருட்கள் எரிந்து நாசமாகின