இமாச்சல பிரதேசத்தில் ஐஸ்கட்டியாக மாறிய ஏரி

இமாச்சல பிரதேச மாநிலம் லாகால்-ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள ஏரி கடுங்குளிர் காரணமாக ஐஸ்கட்டியாக உறைந்துள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது கடுங்குளிர் நிலவி வருகிறது. உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மலைப்பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு குறைந்து மக்களை வாட்டி வதைக்கிறது.

 

ஐஸ்கட்டியாக உறைந்த ஏரி

 

 

இமாச்ச பிரதேச மாநிலம் லாகால்-ஸ்பிட்டி மாவட்டத்தின் ஜோப்ராங் என்ற இடத்தில் உள்ள கொலுடு ஏரி கடுங்குளிரால் ஐஸ்கட்டியாக உறைந்துள்ளது.