கடந்த பத்து மாதத்துக்கு பின்னர் இலங்கைக்கு வருகை தந்தனர் சுற்றுலாப் பயணிகள்

கடந்த பத்து மாதத்துக்கு பின்னர் இலங்கைக்கு வருகை தந்தனர் சுற்றுலாப் பயணிகள்

கடந்த மார்ச்மாதத்துக்கு பின்னர் இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகள் குழுவொன்று இன்றுமாலை வருகை தந்தது.

185 பேரடங்கிய உக்ரேனிய சுற்றுலாப்பயணிகளே PQ-555 என்ற உக்ரேனிய விமானத்தில் மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கினர்.

இவ்வாறு வருகை தந்தவர்கள் பென்தோட்ட, கொக்கல மற்றும் பேருவல ஆகிய இடங்களில் தங்கியிருப்பர் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

அத்துடன் குறித்த சுற்றுலா பயணிகள் 10 முதல் 14 நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.