தமிழகத்தில் இன்று 1,005 பேருக்கு கொரோனா - 11 பேர் பலி

தமிழகத்தில் இன்று 1 ஆயிரத்து 5 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ்  தொடர்பான இன்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

 

 

அதன்படி, தமிழகத்தில் இன்று 1 ஆயிரத்து 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 15 ஆயிரத்து 175 ஆக அதிகரித்துள்ளது.


வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 ஆயிரத்து 867 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

வைரஸ் பரவியவர்களில் இன்று 1 ஆயிரத்து 74 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

 

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 94 ஆயிரத்து 228 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 80 ஆக அதிகரித்துள்ளது.