புதிய வைரஸ் இலங்கையில் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புதிய வைரஸ் இலங்கையில் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் நாட்டிற்குள் நுழைவதை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ள போதிலும் ஏற்கனவே நாட்டில் காணப்படும் வைரஸ் மாற்றமடைந்து ஆபத்தானதாக மாறுவதை தடுக்கமுடியாது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்.

வைரஸ்கள் மாற்றமடைவது இயல்பான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரஸ்மாற்றமடைவதற்கு எல்லையில்லை எங்கும் அது நிகழக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக உலகின் ஏனைய நாடுகளை போல இலங்கையிலும் புதிய வைரஸ் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகில் 20 வகையான புதிய கொரோனா வைரஸ்கள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வகையான வைரஸ் காணப்பட்டாலும் அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.